மல்லை தமிழ் சங்கத்தின் 15-வது ஆண்டு துவக்கவிழா

திருப்போரூரில் மல்லை தமிழ் சங்கத்தின் 15-வது ஆண்டு துவக்கவிழா நடைபெற்றது.

Update: 2024-05-24 14:53 GMT

திருப்போரூரில் மல்லை தமிழ் சங்கத்தின் 15-வது ஆண்டு துவக்கவிழா நடைபெற்றது.


செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மல்லை தமிழ்ச்சங்கத்தின் 15 வது ஆண்டு துவக்க விழா 2024 பெருந்தமிழன், பெருந்தச்சன், மாமல்லன் விருது வழங்கும் விழாவுடன் 10,12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா மல்லை தமிழ் சங்கத்தின் தலைவர் சத்யா தலைமையில் நடைபெற்றது. சங்கப் பொறுப்பாளர் பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு விஐடி பல்கலைக்கழக தலைவர் விஸ்வநாதனுக்கு பெருந்தமிழன் விருதும், மரபு கட்டடக்கலை கலைஞர் குமரேசனுக்கு பெருந்தச்சன் விருதும், கோபுக்கான் ஷிட்டோரியோ கராத்தே தற்காப்புக் கலையின் தலைவர் கனகராஜிக்கு மாமல்லன் விருதும் வழங்கி கௌரவித்தார்.
Tags:    

Similar News