காரிமங்கலத்தில் 16 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

திருமண முகூர்த்த நாட்கள் வருவதை முன்னிட்டு காரிமங்கலம் பாலச்சந்தையில் தேங்காய்கள் விற்பனை ஜோராக நடைபெற்றது.

Update: 2024-05-28 02:46 GMT
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் தோறும் பிற்பகலில் தேங்காய் வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த தேங்காய் வாரச்சந்தைக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தேங்காய்களை விற்க மற்றும் வாங்க வந்து செல்வது வழக்கம் நேற்று நடைபெற்ற வார சந்தையில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கத்திரி மாதம் முடிவடைய உள்ளதால் திருமணம் மற்றும் விசேஷ நாட்கள் வருவதை முன்னிட்டு தேங்காய்கள் விற்பனை ஜோராக நடைபெற்றது. மேலும் சிறிய அளவிலான தேங்காய் 6 ரூபாய் முதல் 12 ரூபாயில் வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 16 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்
Tags:    

Similar News