கெங்கவல்லியில் வீட்டுக்கதவை உடைத்து 16 பவுன் நகை கொள்ளை !

கெங்கவல்லியில் வீட்டுக்கதவை உடைத்து 16 பவுன் நகை கொள்ளை - போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-07-04 06:56 GMT

 கொள்ளை

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே இலுப்பு தோப்பு பகுதியில் வசிப்பவர் சேகர் (வயது 55). இவர், ரிக் வண்டியில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா (48). இவர், நேற்று காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றவர். இரவு 8 மணிக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 16 பவுன் நகைகள் கொள்ளை போனதாக தெரிகிறது. இத தொடர்பாக கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கெங்கவல்லி பகுதியில் அடிக்கடி இதுபோன்ற கொள்ளை சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News