18 வயது இளம்பெண் மாயம்
போளூரில் காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக் கோரி பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.;
Update: 2024-04-05 13:34 GMT
இளம்பெண் மாயம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த இரண்டேறிப்பட்டு கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடினர். மகள் கிடைக்காததால் பெற்றோர் போளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போளூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.