கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி ஏரியும், அதன் அங்கமாக உள்ள பொழி முகமும், அலையாத்தி காடுகளும், ஈர நிலங்களும், பறவைகள் சரணாலயமும், நீர்நிலைகளும் இப்பகுதி மக்களுக்கு மட்டுமல்ல குமரி மாவட்டத்திற்கு ஒரு வரப்பிரசாதம் உள்ளது. மீன்களின் உணவு மண்டலமான இப்பகுதி ஆலிவ் ரெட்லி ஆமைகளின் இன பெருக்க களமாகவும், 180 வரை பறவைகளின் புகலிடமாகவும் விளங்குகிறது என பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.