சேலத்தில் வாலிபரை தாக்கிய நண்பர்கள் 2 பேர் கைது

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே ராம்நகர் பகுதியில் வாலிபரை தாக்கிய நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-10 09:49 GMT
பைல் படம்
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 25). இவருக்கு ஏரிக்காடு பகுதியை சேர்ந்த நண்பர்கள் பிரகாஷ் (23), மற்றொரு பிரகாஷ் (25) ஆகியோர் உள்ளனர். இதற்கிடையே அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் பாலமுருகன் தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்்சை பெற்று காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காரிப்பட்டி போலீசார் நேற்று பிரகாஷ், மற்றொரு பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.
Tags:    

Similar News