வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது

சிவகாசியில் வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-03 13:34 GMT

சிவகாசியில் வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளி சரமரியாக குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.சிவகாசி அருகே அனுப்பன்குளத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.

இவருக்கு சொந்தமான சிமெண்டு செங்கல் தயாரிக்கும் செங்கல் சூளை நாரணாபுரம்புதூர் பகுதியில் இயங்கி வருகிறது.இங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இவர்கள் சிலரும் நாரணபுரம் புதூர் பகுதியைச் சேர்ந்த சில வாலிபர்களும் அதே பகுதியில் உள்ள பொட்டலில் உட்கார்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது ஒருவருக்கொருவர் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் பீகார் மாநிலம் கயா பகுதியைச் சேர்ந்த காங்ரேஷ் புய்யான் (43) என்ற தொழிலாளி சரமரியாக குத்தி கொலை செய்யப்பட்டார்.இச்சம்பவம் தொடர்பாக சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

சிவகாசி டிஎஸ்பி சுப்பையா ஆலோசனையின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர் இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக நாரணாபுரம்புதுரைச் சேர்ந்த பாண்டிச் செல்வம் மகன் வனபாண்டி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் மகன் தமிழ்மணி (21) இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்

Tags:    

Similar News