சேலத்தில் மசாஜ் சென்டர் வைத்து விபசாரம் நடத்திய கேரள பெண் உள்பட 2 பேர் கைது

தப்பி ஓடிய உரிமையாளரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2024-07-04 09:53 GMT

கைது

கேரளாவை சேர்ந்தவர் சைனி. இவர் சேலம் புதிய பஸ் நிலையம் எதிரே அத்வைத் ஆசிரமம் சாலை, சரஸ்வதி தெருவில் மசாஜ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். அந்த மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமிபிரியா, இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையில் போலீசார் நேற்று மதியம் மசாஜ் சென்டருக்குள் அதிரடியாக சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரிய வந்தது. இதையடுத்து விபசாரம் நடத்திய கேரளாவை சேர்ந்த நீத்து (வயது 25), வாலிபர் சாவின் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய மசாஜ் சென்டர் உரிமையாளர் சைனியை தேடி வருகின்றனர். மேலும் விபசாரத்தில் ஈடுபட்ட ஆந்திரா, புதுச்சேரி, திருப்பூரை சேர்ந்த 3 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். புதிய பஸ் நிலையம் எதிரே எப்போதும் பரபரப்பாகவும், மக்கள் நடமாட்டம் இருக்கும் சாலையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடந்தது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News