தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற பெண் உட்டட 2 பேர் கைது

இரணியலில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற பெண் உட்டட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-07-03 13:56 GMT

பைல் படம்


கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆளுர் அருகே செக்கார விளை பகுதியை சேர்ந்த தளவாய் குமாரன் (61)என்பவரது கடையில் சோதனை செய்தனர். அங்கு போதை தரக்கூடிய தடை செய்யப்பட்ட 15 கிராம் எடை கொண்ட 45 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.     

  அதேபோல் மணகரை பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமாரி (52) என்பவர் கடையில் சோதனை செய்தனர் அப்போது அரசால் தடை செய்யப்பட்ட ஆறு புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இரண்டு பேரையும் இரணியல் போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார்  இரண்டு பேர் மீதும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News