மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி விபத்து !
சேத்துப்பட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Update: 2024-03-28 06:32 GMT
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியத்தில் உள்ள மேல்சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வெங்கடேசன் (வயது 45), ராஜபூவரசன் (42). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சேத்துப்பட்டு நோக்கி வந்தனர். கங்கைசூடாமணி பகுதியில் வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.