கூடுதல் விலைக்கு மது விற்ற 2 பேர் கைது!

அரக்கோணம் பகுதியில் அரசு மதுபானங்களை கூடுதல் விளக்க விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-05-29 16:12 GMT

அரக்கோணம் பகுதியில் அரசு மதுபானங்களை கூடுதல் விளக்க விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


அரக்கோணம் டவுன் போலீசார் மோசூர், அரக்கோணம் - திருவள்ளூர் ரோடு, ரயில் நிலையம், பஜார் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோசூர் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அதேப்பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (38) என்பதும், கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இதே போன்று அரக்கோணம் பஜார் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த அரக்கோணம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த சபரிநாதன் (47) என்பவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News