போக்சோ வழக்கில் 20 ஆண்டு சிறை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகப்பட்டினம் திமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

Update: 2024-05-13 15:11 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுமியிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகப்பட்டினம் திமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உட்கோட்டத்தில் உள்ள பூம்புகார் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட தருமகுளம் கிராமத்தில் 2017-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியிடம், நெய்தவாசல் வடபாதி தெருவைச் சேர்ந்த கலைவாணன் மகன் மதுபாலன் (31) என்பவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து நாகப்பட்டினம் முதன்மை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று மதுபாலனுக்கு பிரிவு 6 உடன் இணைந்த 5(1)-ன்படி 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து, கட்டத் தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், பிரிவு 506(ii) -ன்படி 7 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் அபராத தொகை ரூ.5,000 விதித்தும், கட்டத்தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவில் உள்ளதால் 20 ஆண்டுகாலம் மட்டுமே சிறை தண்டனை.
Tags:    

Similar News