வார இறுதி நாள் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கம் !

சேலம் வார இறுதி நாள் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கோட்டம் சார்பில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Update: 2024-03-22 07:10 GMT

சிறப்பு பஸ்கள் இயக்கம்

சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வார இறுதி நாட்கள், பவுர்ணமி, மற்றும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை பல்வேறு வழித்தடங்களில் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதேபோல், சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை மற்றும் பெங்களூருக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி மற்றும் மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், ஈரோடு மற்றும் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரூவுக்கும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும், பவுர்ணமியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சேலம், தர்மபுரி, ஓசூர் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து திருவண்ணாமலைக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர, பங்குனி உத்திரம் திருவிழாவையொட்டி ஆத்தூரில் இருந்து வடசென்னிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு பயணிகளின் தேவைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே, பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News