திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பஸ்கள்

வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Update: 2024-05-21 06:43 GMT

வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.


மே 23-ந் தேதி வைகாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வசதியாக நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்களில் சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மேலும், பயணிகளின் வசதிக்காக வைகாசி பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சேலம், தர்மபுரி, ஓசூர் பஸ் நிலையங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை மாலை 4 மணி முதல் 23-ந் தேதி இரவு 12 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் வீதம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் அரசு விரைவு போக்குவரத்துக்கழக முன்பதிவு மையம் வழியாகவும், இணையத்தளம் (www.tnstc.in) மற்றும் ஆப் செயலி (tnstc bus ticket booking app) வழியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி கொண்டு கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News