24 மணிநேர தாய்-சேய் நல கண்காணிப்பு மையம்

திருச்சி ஆட்சியரகத்தில் 24 மணி நேர தாய்-சேய் நல கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-16 02:24 GMT

ஆட்சியர் அலுவலகம் 

திருச்சி மாவட்டத்தில், தாய் சேய் நலனை கண்காணிக்கவும், மேம்படுத்தவும் தாய் சேய் நலம் உதவி மற்றும் கண்காணிப்பு மையம் என்ற பெயரில் புதிய மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் வாயிலாக கா்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மாா்களுக்கும் குறிப்பாக சிக்கல் உள்ள கா்ப்பிணிகளுக்கும் தேவையான ஆலோசனைகள் மற்றும் தொடா் பராமரிப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் செவிலியா்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனா்.

கா்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மாா்கள் மற்றும் அவா்தம் உறவினா்கள் 9952611108, 7530015292 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தேவையான ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளலாம். மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து மகப்பேறு அலுவலா்களும் தங்களிடம் பராமரிப்பு மற்றும் சிகிச்சை பெற்று வரும் சிக்கல் உள்ள கா்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த தாய்மாா்கள், உதவி தேவைப்படும் கா்ப்பிணிகள் குறித்த விபரங்களை மேற்கண்ட எண்களில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா். 

Tags:    

Similar News