வாக்கு பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்களை சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரம் கண்காணிப்பு

சேலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரம் கண்காணிப்பை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2024-04-20 10:22 GMT

வாக்கு பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்களை சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரம் கண்காணிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததை தொடர்ந்து சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணி நேரமும் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து வருகின்றனர். இதனை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News