247 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்!
வேலூர் மாவட்டத்தில் 247 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.;
சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலுார் மாவட்டத்திலுள்ள 247 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து ஊராட்சிகளில் தவறாமல் கிராம சபையை கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஆகஸ்ட் 13) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இதில் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.