ராசிபுரத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி முகாம்

ராசிபுரத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2024-04-07 13:13 GMT

ஆட்சியர் அறிவுரை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், எஸ்.ஆர்.வி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 359 வாக்குச்சாவடி முதன்மை அலுவலர்கள், 347 வாக்குச்சாவடி அலுவலர்கள்-1, 244 வாக்குச்சாவடி அலுவலர்கள்-2, 424 வாக்குச்சாவடி அலுவலர்கள்-3 என மொத்தம் 1,374 அலுவலர்கள் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தல் 2024-ஐ சிறப்பாகவும், அமைதியாகவும், பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி வாக்களிக்க,

ஏதுவாக வாக்குச்சாவடி மையங்களில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் உமா அறிவுறுத்தினார். இந்த ஆய்வுகளின் போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் த.முத்துராமலிங்கம் இராசிபுரம் வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News