மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் 3பேர் தீக்குளிக்க முயற்சி

Update: 2023-11-14 10:52 GMT

தீக்குளிக்க முயன்றவர்கள்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் அடுத்த பல்பநத்தம் தோட்டக்கார வட்டம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் இவருக்கு இனியா மற்றும் புனிதா என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். மாணிக்கம் உயிரிழந்த நிலையில் அவருக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்திலிருந்து மனைவிகl இணியாவிர்க்கு குழந்தை இல்லாததால் ஒன்றரை ஏக்கர் நிலத்தை எழுதி வைத்துள்ளார் இந்த நிலையில் இரண்டாவது மனைவி புனிதாவிற்கு மீதமுள்ள நிலத்தை எழுதி வைத்துள்ளார்.

இந்த நிலையில் தோட்டக்கார வட்டம் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவர் இனியாவிர்க்கு எழுதி வைத்த ஒன்றரை ஏக்கர் நிலத்தில் தனக்கு வழி உள்ளதாகவும் மேலும் அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

மேலும் இன்று நடராஜ் ஜேசிபி இயந்திரத்துடன் அந்த நிலத்தில் அத்துமீறி குழி தோண்டி உள்ள இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம் குடும்பத்தினர் இனியா மற்றும் புனிதா மற்றும் புனிதாவின் பிள்ளைகளான சிவா மற்றும் அபிஷேக் ஆகிய நான்கு பேரும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பு டீசல் கேனை வைத்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டீசல் கேனை பிடுங்கி எறிந்து மாவட்ட வருவாய் அலுவலர்களிடம் புகார் அளியுங்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அங்கிருந்து கலந்து சென்றனர் இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News