கள்ளச்சந்தையில் மது விற்ற 3 பேர் கைது

தென்காசி மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது விற்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-06-23 03:13 GMT

மதுவிற்பனை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை அடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி சாராய வேட்டை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து தென்காசி மாவட்டத்தில் எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில் கரிவலம்வந்தநல்லூர் மற்றும் குற்றாலம், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் மது விற்ற தகவல் கிடைத்தது விரைந்து சென்ற போலீசார் 3 பேர் கைது செய்யப்பட்டு 44 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News