வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது !

திண்டுக்கல்லில் வாலிபர் வெட்டி படுகொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-03-27 05:44 GMT

கைது

திண்டுக்கல் சவேரியார் பாளையம் அருகே உள்ள CKCM-காலனி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீராகௌதம் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து S.P. பிரதீப் உத்தரவின் பேரில் நகர் ASP.சிபின் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் அஜய்குமார், விஜய்ஆதிராஜ், மோகன்சுந்தர் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News