கடத்த முயன்ற 3,000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

ராசிபுரம் அருகே கடத்த முயன்ற 3,000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: இருவர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-12-01 15:12 GMT

கடத்த முயன்ற 3,000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த இருவரை நாமக்கல் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3,000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை எஸ்ஐ சதீஷ்குமார் தலைமையிலான போலீஸார் ராசிபுரம் அருகே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினிடோர் ஆட்டோவை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் ரேசன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து ஆட்டோவில் இருந்த 3,000 கிலோ அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த பி.அழகேசன் (55), வலசையூரைச் சேர்ந்த பெரியசாமி (38) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரிடமும் அரிசி எங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. எங்கு கடத்திச் செல்லப்படுகிறது என்பது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News