திண்டுக்கல் அருகே ஏ.வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சகாயராணி (32). இவரது கணவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களுக்கு ஜெரோன்(10), செபஸ்டின் அபர்னா(4) என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தோமையார்புரம் அருகே ஓர் உறவினர் வீட்டிற்கு குழந்தைகளுடன் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த போது ஆட்டோ கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், சிறுமி செபஸ்டின் அபர்னா பரிதாபமாக உயிரிழந்தார்.