மண் கடத்தல் விவகாரத்தில் 4 பேர் கைது !

பஞ்சப்பள்ளி அருகே பாளையம் கிராமத்தில் அனுமதி இன்றி ஆற்றில் மண் அள்ளிய நபர்கள் கைது பொக்லைன் மற்றும் டிராக்டர் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-04-08 04:14 GMT

காவல்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பஞ்சப்பள்ளி காவலர்கள் பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது சனத்குமார் ஆற்றின் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் 2 டிராக்டரில் நொரம்பு மண் அள்ளுவது தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் அங்கு சென்று டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் கொக்கிக்கல் கிராமத்தை சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் முருகன் , டிரைவர்கள் சேகர் ,சுகந்திரன்,கிரி ஆகியோர் , அனுமதியின்றி மண் அள்ளி கடத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்த அவர்கள் 4 பேரையும் பஞ்சப்பள்ளி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் 2 டிராக்டர்கள், பொக்லைன் எந்திரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News