சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலி

சாத்தூர் அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலியாயினர்.

Update: 2024-06-29 07:52 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தைச் சேர்ந்த சகாதேவன்(41)என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.இந்த பட்டாசு ஆலை மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கம்போல் இன்று காலை பட்டாசு தயாரிக்க தேவையான பட்டாசு மருந்துகள் கலக்கும் பணியில் புதுசூரங்குடியை சேர்ந்த மாரிச்சாமி(38),அச்சங்குளம் ராஜ்குமார்(45),சத்திரபட்டி மோகன்(40,செல்வக்குமார்(50 ஆகிய 4-பேரும் ஈடுபட்டிருந்தனர்.இதையடுத்து மருந்து கலக்கு போது உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதில் 3-அறைகள் தரைமட்டமாகின இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேரும் உயிரிழந்தனர்.வெடி விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்து வெம்பக்கோட்டை மற்றும் ஏழாயிரம்பண்ணை தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் சாத்தூர் தாலுகா காவல் துறையினர்,சாத்தூர் வட்டாட்சியர் லோகநாதன் ஆகிய சம்பவ இடத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் உயிரிழந்த நான்கு பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கபட்டுள்ளன.மேலும் வெடி விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏற்கனவே கடந்த மே 9-ம் தேதி சிவகாசி அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் தற்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News