சிவகாசியில் தனியார் பேருந்து ஒட்டுநர் சுரேஷ் கொலை வழக்கில் 4 பேர் கைது

சிவகாசியில் தனியார் பேருந்து ஒட்டுநர் சுரேஷ் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-07 16:04 GMT
சிவகாசியில் தனியார் பேருந்து ஒட்டுநர் சுரேஷ் கொலை வழக்கில் 4 பேர் கைது...

சிவகாசியில் தனியார் பேருந்து ஓட்டுநர் கொலை வழக்கில் நான்கு பேர் கைது.... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே தனியார் பேருந்து ஓட்டுனர் சுரேஷ் கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளை போலீசார் பிடிக்கச் செல்லும் போது தப்பி ஓட முயன்ற டோனி என்ற பாலகணேஷ் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

சிவகாசி அருகே நாரணாபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(36).இவர் தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.சுரேஷ் கடந்த 5 ஆம் தேதி காலை சிவகாசி - சாத்தூர் சாலையில் உள்ள பயன்பாடு இல்லாத கட்டிடத்தில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த சிவகாசி கிழக்குபோலீஸார் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சுரேஷை கொலை செய்த வழக்கில் டோனி (என்ற)பால கணேஷ்(28), நந்தகுமார்(26), கார்த்தீஸ்வரன்(21),பழனி(28) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்த விசாரணையில்,

முன் பகை காரணமாக கொலை செய்தோம் என்று வாக்குமூலம் அளித்தனர்.மேலும் தலைமறைவான குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய சென்ற போது தப்பி ஓட முயன்ற டோனி (என்ற) பாலகணேசிற்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பாலகணேஷ் சிவகாசி அரசு மருத்துவமனையில் போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

Similar News