குற்றவழக்கில் தேடப்பட்டு வந்த 4பேர் காஞ்சிபுரத்தில் கைது

Update: 2023-11-02 12:38 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கையை சேர்ந்தவர் ஊர்காவலன் 28. இவர் மீது, கொலை, கொள்ளை என பல குற்ற வழக்குகள் அந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இதனால் போலீசார் அவரை தேடி வந்தனர். அவர், நெய் வியாபாரம் செய்வதாக கூறி, காஞ்சிபுரம் பல்லவன் நகர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து 6 மாதமாக தங்கி வந்தார். காலையில் ஒரு நெய் டின்னை எடுத்து கொண்டு வெளியில் செல்வார். மாலையில் திரும்பி வருவார்.

இதனால் அந்த பகுதி மக்களுக்கு சந்தேகம் வரவில்லை. இந்நிலையில், சிவகாஞ்சி போலீசாருக்கு, சிவகங்கையை சேர்ந்த குற்ற வழக்கில் தொடர்புடையவர் பல்லவன் நகர் பகுதியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் போலீசார் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

போலீசார் தீவிர விசாரணையில் அவர் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர் என தெரிய வந்தது. மேலும் விசாரணையில், அவரது கூட்டாளிகளான காஞ்சிபுரம் அடுத்த, காரை பகுதியை சேர்ந்த ராமன் 24, அஜித் 22, மாரி 23, ஆகிய மூவரும் அந்த பகுதியில் தங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஊர்காவலன், ராமன், அஜித் மற்றும் மாரி ஆகிய 4 பேரையும், சிவ காஞ்சி போலீசார் நேற்றுமுன்தினம் கைது செய்தனர்.

Tags:    

Similar News