கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 5 பேர் கைது !

போலீசார் திண்டுக்கல் பொன்மாந்துறை புதுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.திக பணம் தேவை ஆகவே பைபாஸில் வரும் வாகனங்களை வழிமறித்து கொள்ளையடிப்பதற்கும் திட்டம் தீட்டியது தெரியவந்தது.

Update: 2024-04-06 06:58 GMT

கைது

திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திர மோகன்,சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திண்டுக்கல் பொன்மாந்துறை புதுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஆழங்குளத்து கரையில் அருகில் ஒரு கும்பல் தனியாக அமர்ந்திருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.அங்கு சென்று அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் ஆர்.வி.நகரைச் சேர்ந்தவர்கள் என்றும், மேலும் இவர்கள் மது குடித்து ஜாலியாக வாழ்வதற்கு அதிக பணம் தேவை ஆகவே பைபாஸில் வரும் வாகனங்களை வழிமறித்து கொள்ளையடிப்பதற்கும் திட்டம் தீட்டியது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து இரும்பு கம்பி,உருட்டு கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News