சாராய விற்பனை செய்த 5 பேர் கைது

திருவண்ணாமலையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-03-30 09:09 GMT

கைது

திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட வாசுதேவன்பட்டு பகுதியை சேர்ந்த முனியன் (வயது 58), ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (42), வடமாத்தூர் கிராமத்தை சேர்ந்த முனியம்மாள் (42), மாரி (43), மேல்படூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி (58) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News