5- ரோடு அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து !

5- ரோடு அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. முதியவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.

Update: 2024-03-09 11:20 GMT
5- ரோடு அருகே டூவீலர் மீது கார் மோதி விபத்து. முதியவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, ஆரியூர், புஞ்சைகாளக் குறிச்சி அருகே உள்ள குஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் வயது 68. இவர் மார்ச் 7ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் சின்ன தாராபுரத்திலிருந்து கரூர் செல்லும் சாலையில் அவரது TVS XL சூப்பர் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் சின்னதாராபுரம் ஐந்து ரோடு, வேல்முருகன் ரைஸ் மில் அருகே சென்று கொண்டு இருந்தபோது, அதே சாலையில் சிபிசக்கரவர்த்தி என்பவர் வேகமாக ஓட்டி வந்த மாருதி கார், கணேசன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த கணேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கணேசனின் மகன் செந்தில்குமார் வயது 45 என்பவர், அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட சின்ன தாராபுரம் காவல் துறையினர்,காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமான சிபிசக்கரவர்த்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News