பேரறிஞர் அண்ணா 55வது ஆண்டு நினைவு தினம்

பேரறிஞர் அண்ணா 55வது ஆண்டு நினைவு தினம்

Update: 2024-02-03 06:43 GMT
பேரறிஞர் அண்ணா 55 ஆவது ஆண்டு நினைவு தினம் திருச்செங்கோட்டில் கடைபிடிக்கப்பட்டது, திமுக நகரச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் ஆர் நடேசன்,நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, பின்னர் முக்கிய வீதிகள் வழியாக அமைதி ஊர்வலம் நடைபெற்றது அதன் பின்னர் நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா திரு உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி மற்றும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது, திமுக மாவட்ட துணை செயலாளர் மயில்சாமி,திமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்பாபு,திருச்செங்கோடு திமுக ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் மல்லசமுத்திரம் ஒன்றிய செயலாளர் பழனிவேல் மற்றும் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News