வத்திராயிருப்பு பகுதியில் வெறிநாய் கடித்து 6பேர் காயம்

வத்திராயிருப்பு பகுதியில் வெறிநாய் கடித்து 6பேர் காயம் அடைந்தனர்.

Update: 2024-07-02 12:06 GMT

சிகிச்சை பெற்று வந்தவர்கள்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி உட்பட்ட 10 வது வார்டு பலகுடி கீழத்தெரு பகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட வெறிநாய்கள் சுற்றித்திரிந்து வருகின்றன. இந்த வெறி நாய்கள் அப்பகுதியில் உள்ள கருப்பசாமி, கிருஷ்ணன், முருகேஸ்வரி உள்ளிட்ட 6 பேரை கடித்துள்ளது.

வெறிநாய் கடித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவ வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வத்திராயிருப்பு பேரூராட்சி பகுதிகளில் உள்ள பெரும்பாலான தெருக்களில் வெறி நாய்க்கள் எண்ணிக்கை கூடியதாகவும்,பொதுமக்களே அச்சுறுத்தி வருவதாகவும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

  எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து வெறிநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கையும் எடுத்துள்ளனர்.

Tags:    

Similar News