கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உட்பட - 7 பேர் கைது !

சிவகங்கை அருகே அண்ணன், தம்பி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-07-03 05:56 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஜெயசூர்யா (25), சுபாஷ் (23) ஆகிய இருவரும் சிவகங்கையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் மஞ்சுவிரட்டில் மாடு பிடித்தது தொடர்பான பிரச்சினையில் ஜூன் 30-ம் தேதி இரவு கொல்லங்குடி அருகே கல்லனை பகுதியில் ஜெயசூர்யா, சுபாஷ் ஆகிய இருவரையும் 8 பேர் கும்பல் வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து காளையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய சிவகங்கை காளவாசலைச் சேர்ந்த திவாகர் (23), சாஸ்திரி தெருவைச் சேர்ந்த வாணிகருப்பு மனைவி மதுமதி (26), சுந்தரநடப்பைச் சேர்ந்த சந்தோஷ் (23), நகரம்பட்டியைச் சேர்ந்த ராம்ஜி (21), யுவராஜ் (22), அருண்குமார் (30), ஒக்கூரைச் சேர்ந்த அபினேஷ் (22) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News