திருவெண்ணைநல்லூர் அருகே 7 கூரை வீடுகள் எரிந்து சேதம்

திருவெண்ணைநல்லூர் அருகே மின் கசிவால் 7 கூரை வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன.

Update: 2024-07-03 14:44 GMT

திருவெண்ணைநல்லூர் அருகே மின் கசிவால் 7 கூரை வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன.


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த சுரேஷ், பானையன், துரை, பாலகிருஷ்ணன், அன்பழகன், சத்யராஜ், ஆனந்தராஜ், உள்ளிட்ட நபர்கள் வசிக்கும் வீடுகளின் மேலே சென்ற மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்கசிவு ஏற்பட்டு சுரேஷ் வீடு தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தீயை அணைப்பதற்குள் காற்றின் வேகத்தால் சுரேஷ் வீட்டில் பற்றிய தீ மலமல வென அருகில் இருந்த ஆறு வீடுகளுக்கும் பரவியது.இதனைத் தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தும் அணைக்க முடியவில்லை என்பதால், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.ஒரே கிராமத்தில் ஏழு வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானதால் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமாகி உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் விரைந்து அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News