கடையநல்லூரில் பூட்டை உடைத்து நகை திருட்டு !
கடையநல்லூரில் பூட்டை உடைத்து 70 பவுன் நகை திருட்டு - போலீசார் விசாரணை.;
By : King 24x7 Angel
Update: 2024-03-15 06:14 GMT
நகை திருட்டு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புது தெருவை சேர்ந்தவர் காஜாமைதீன். இவர் ரமலான் தொழுகைக்காக நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே ஒரு பெட்டிக்குள் சாவியை வைத்துவிட்டு தொழுகைக்கு சென்றுள்ளார். தொழுகை முடித்து வீட்டைத் திறந்து பார்த்தபோது வீட்டின் பீரோ கலைக்கப்பட்டு கிடந்தது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 70 நகைகளை காணவில்லை. இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.