கம்பத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 700 மது பாட்டில்கள் பறிமுதல்

கம்பத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்த 700 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்து வருகின்றனர்.

Update: 2024-04-09 04:38 GMT

காவல் நிலையம் 

தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கோதண்டராமனுக்கு கிடைத்த தகவலின் பெயரில் அவர் காவல்துறையினருடன் டி கே எஸ் நகர் பகுதிக்கு ரோந்து பணி சென்றார். அப்போது காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள ஒரு கார் பார்க்கிங்கில் சோதனை செய்த போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்திருந்த 700 மது பாட்டில்களை கண்டுபிடித்தனர் மது பாட்டில்களை கைப்பற்றிய காவல் துறையினர் அங்கிருந்த கண்ணன் என்பவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News