எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் 75 வது குடியரசு தின விழா

எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் 75 வது குடியரசு தின விழா நகர மன்ற தலைவர் பாஷா தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-01-26 13:39 GMT

தேசியக் கொடி ஏற்றிய நகர்மன்ற தலைவர்

75வது குடியரசு தினம் சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் தேசிய கொடியை ஏற்றிவைத்து மொழிப்போர் மற்றும் சுதந்திர தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்.

  75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டாரத்தில் உள்.ள அரசு அலுவலகங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி வீர மரணம் அடைந்த தலைவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதனைத் தொடர்ந்து எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் பாஷா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மூத்த மொழிப்போர் தியாகிகள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. அப்போது நகராட்சி ஆணையாளர் முஸ்தபா மற்றும் நகராட்சி அலுவலர்கள்,நகர மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News