ரூ.78 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.78 கோடியில், 7 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2024-03-07 07:45 GMT


ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.78 கோடியில், 7 ஆயிரம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்கிழமை இரவு நடைபெற்றது. இந்த விழாவுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா்.திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ப.வேலுச்சாமி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ.காந்திநாதன்,திண்டுக்கல் மத்தியக் கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளா் சு. ராமகிருஷ்ணன்,திண்டுக்கல் மாவட்ட பொது விநியோகத்திட்ட துணைப் பதிவாளா் இரா.அன்புக்கரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Tags:    

Similar News