செட்டிகுளம் பகுதியில் ரூ.8.50 லட்சம் பணம் பறிமுதல்
பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 8 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-04-18 14:43 GMT
பணம் பறிமுதல்
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் பகுதியில் வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் சத்யா தலைமையிலான பறக்கும் படையினர். வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஸ்கார்பியோ வாகனத்தில் வந்த சசிகுமார் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூபாய் 8 லட்சத்தி 50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து பெரம்பலூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.