கோவிந்தம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 8பேர் கைது

Update: 2023-11-21 09:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 கரூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவிந்தம்பாளையம் பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் ராஜ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நவம்பர் 19ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில் கோவிந்தம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, அப்பகுதியில் உள்ள முருகன் சர்வீஸ் சென்டர் அருகே பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த செல்வம், கோவிந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனசேகரன், ஆண்டாங் கோவில் பகுதியைச் சேர்ந்த துரைசாமி, நேரு, செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார், ராமா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்,

மற்றொரு செந்தில்குமார், சாந்தி நகரை சேர்ந்த சரவணன் ஆகிய எட்டு பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும் ரூபாய் 350-ம் பறிமுதல் செய்தனர். பின்னர் ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, காவல் நிலைய பினையில் விடுவித்தனர் கரூர் மாநகர காவல்துறையினர்.

Tags:    

Similar News