வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 800 போலீசார்!

அரக்கோணம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 800 போலீசார் ஈடுபட உள்ளனர்.

Update: 2024-06-03 10:04 GMT

அரக்கோணம் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 800 போலீசார் ஈடுபட உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல்வாக்கு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. அரக்கோணம் தொகுதி வாக்கு எண்ணிக்கை வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கையையொட்டி இங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் , 4 துணை காவல் காணிப்பாளர்கள் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை மற்றும் மத்திய ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என சுமார் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Tags:    

Similar News