மாணவர்களுக்கு 8.25 கோடி கல்வி கடன் உதவி வழங்கல்

சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்களுக்கு ரூபாய் 8.25 கோடி கல்வி கடனாக வழங்கப்பட்டது.

Update: 2024-07-01 14:59 GMT

சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்களுக்கு ரூபாய் 8.25 கோடி கல்வி கடனாக வழங்கப்பட்டது.


சிவகங்கை மருதுபாண்டியர் நகர் கல்வித்துறை கூட்டரங்கில் முன்னோடி வங்கி சார்பில் சிறப்பு கல்விக்கடன் முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் (வளர்ச்சி) அன்பு, முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் உதயகுமார், விஜயசரவணன், ஸ்டேட் பாங்க் மேலாளர் முத்து, இந்தியன் வங்கி மேலாளர் சந்தீப்குமார், ஐ.ஓ.பி.,மேலாளர் பிக்ரம் கேசரி ஷாஹு, கனரா வங்கி மேலாளர் ஜெய்சங்கர், தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் ஜீவா, பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் அருண் ஆகியோர் பங்கேற்றனர். முகாமில் இதுவரை விண்ணப்பித்த 190 மாணவர்களுக்கு கல்வி கடனாக ரூ.8.25 கோடியை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
Tags:    

Similar News