தூத்துக்குடியில் 90 சதவிகித பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் 90 சதவீத அரசு பேருந்துகள் வழக்கம்போல் ஓடுகிறது. பொதுமக்கள் எந்தவித பாதிப்பும் இன்றி பயணம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-10 08:08 GMT

பேருந்துகள் இயக்கம் 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 96 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பண பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்கி ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9ம்தேதி முதல் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளான இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் கோவில்பட்டி உள்ளிட்ட 7 பணிமனைகளில் இருந்து மொத்தம் 302 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் 90 சதவிகிதம் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் வழக்கம்போல் பயணம் செய்து வருகின்றனர். இதனால் பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் மக்கள் எந்த ஒரு சிரமமும் இன்றி பேருந்தில் சென்று வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News