ஆலங்குளத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 4வயது சிறுவன் பலி

ஆலங்குளத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 4வயது சிறுவன் பலியனான்.

Update: 2024-01-19 12:42 GMT
ஆலங்குளத்தில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் பலி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜ் நகரைச் சோ்ந்த சுரேந்தா் மகன் அஸ்வந்த்(4). அப்பகுதியில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி வகுப்பு பயின்று வந்தாா். இவருக்கு, கடந்த 10 தினங்களுக்கும் மேலாக காய்ச்சல் இருந்து வந்ததாம்.

ஆலங்குளம், பாவூா்சத்திரம் என பல்வேறு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதில் டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

Tags:    

Similar News