மாதவரம் பகுதியில் 4 வயது குழந்தை சாலை விபத்தில் பலி !
மாதவரம் ரிங் ரோடு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் டிப்பர் லாரி மோதி நான்கு வயது குழந்தை உயிரிழப்பு.;
By : King 24x7 Angel
Update: 2024-06-08 11:20 GMT
பலி
சென்னை திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் சேகர் பூங்கோதை தம்பதியினர் இருசக்கர வாகனத்தில் திருமண நாளை முன்னிட்டு கோவிலுக்கு செல்லும்போது விபத்து ஏற்பட்டது. திருமண நாளுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் தாய் தந்தை மற்றும் குழந்தை மூன்று பேரும் கோயிலுக்கு சென்ற போது டிப்பர் லாரியில் மோதி நான்கு வயது குழந்தை பலத்த காயம் ஏற்பட்டு பலி மாதவரம் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.