மின் கம்பம் உடைந்து விழுந்து வங்கிக் காவலாளி உயிரிழப்பு

ஸ்ரீவைகுண்டத்தில் தென்னை மரமும், மின் கம்பமும் உடைந்து விழுந்ததில் தனியார் வங்கிக் காவலாளி உயிரிழந்தார்.

Update: 2024-06-23 11:26 GMT

 பலி

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், பெரும்பத்து பகுதியைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம். தனியார் வங்கிக் காவலாளியான இவர், நேற்று அப்பகுதியில் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் நின்றிருந்த தென்னை மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பம் உடைந்ததாம். இதில் இடிபாடுகளில் சிக்கி சங்கரலிங்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலின்பேரில், ஸ்ரீவைகுண்டம் போலீசார் வந்து சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News