ஈரோடு ரயில் நிலையத்தில் தீ பிடித்து எரிந்த காரால் பரபரப்பு
Update: 2023-11-08 07:07 GMT
ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் தனது குடும்பத்தினரை வழியனுப்ப ரயில் நிலையம் வந்த போது திடீரென தனது காரின் முன் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து ரயில் நிலையத்தில் கரும் புகை சூழ்ந்தது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். தீவிபத்தில் காரின் முன்பகுதி முற்றிலுமாக எரிந்து நாசமானது.