ஒத்தமாந்துறையில் டூவீலர் மீது கார் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்

ஒத்தமாந்துறையில் டூவீலர் மீது கார் மோதி விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.;

Update: 2024-05-26 15:56 GMT

சாலை விபத்து

 கரூர் மாவட்டம்,சின்ன தாராபுரம், அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் வயது 47. இவர் மே 24ஆம் தேதி இரவு 9:30 மணி அளவில், கரூர் - தாராபுரம் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் ஒத்தமாந்துறை பகுதியில் வசித்து வரும் நந்தகோபால் வீடு அருகே சென்றபோது,

அதே சாலையில், கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, கொசூர் அருகே உள்ள குப்பாண்டியூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் வயது 25 என்பவர், வேகமாக ஓட்டி வந்த கார், தங்கராஜ் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த தங்கராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த தங்கராஜின் மனைவி கவிதா வயது 40 என்பவர், அளித்த புகாரின் பேரில்,

சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்ன தாராபுரம் காவல்துறையினர்.

Tags:    

Similar News