இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதி விபத்து - இளைஞர் பலி

கெங்கவல்லி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-06-18 02:03 GMT

ராஜேஷ் குமார்

கெங்கவல்லி:சென்னையை சேர்ந்த ராஜேஷ் குமார், தினேஷ் ஆகியோர் கெங்கவல்லி, சமத்துவபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். தொடர்ந்து இருவரும் தரனீஸ் என்பவருடன் கெங்கவல்லிக்கு பைக்கில் சென்று மீண்டும் திரும்பி வரும்போது கெங்கவல்லி நோக்கி சென்ற சரக்கு வேன் மோதியதில் ராஜேஷ் குமார் சம்பவ இடத்தில் பலியானார். மேலும், இருவர் பலத்த காயமடைந்து அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News