பைக்கில் சென்றவர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

பைக்கில் சென்றவர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.;

Update: 2024-04-06 16:37 GMT

காவல் நிலையம் 

திருப்பூர் மாவட்டம், முத்தூர், மங்கலப்பட்டி அருகே உள்ள சின்னத்துபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது 54. அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் வயது 65. இவர்கள் இருவரும் ஏப்ரல் 4-ம் தேதி காலை 8 மணி அளவில், கோவை - கரூர் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். ரவிச்சந்திரன் டூவீலரை ஓடிச் சென்றார்.

இவர்களது வாகனம் கரூர் மாவட்டம், தென்னிலை காவல் எல்லைக்குட்பட்ட, நள்ளிபாளையம் பிரிவு அருகே வந்த போது, எதிர் திசையில் நாகை மாவட்டம், கதிரிபுலம் ஈரவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் வயது 35 என்பவர், வேகமாக ஓட்டி வந்த பொலிரோ பிக் அப் வாகனம், ரவிச்சந்திரன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த ரவிச்சந்திரன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூரில் உள்ள ஆதார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சரக்கு வாகனத்தை, வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல்துறையினர்.

Tags:    

Similar News